Sunday, November 6, 2011

கலாம் எனும் அறிவியல் சாமியார்


கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக - இன்றைய முக்கிய முகமாக முன்னிறுத்தப்பட்டிருப்பவர் கலாம் எனும் அறிவியல் சாமியார். அவர் எது கூறினாலும் சரியாகத்தான் இருக்கும் என்று பக்த கோடிகள் வரிசைகட்டி நிற்கிறார்கள்.

அணு உலைக்கு ஆதரவாக - அவரது பெயரையும் ஆசிரியராக உள்ளடக்கி ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது.


அணு உலைகளின் விபத்துகளை சதவிகித அடிப்படையில் ஒரு பத்தியில் தாண்டிச் செல்கிறது கட்டுரை.

நிலக்கரி போன்ற தாது சுரங்கங்களின் பாதகமாக கீழ் உள்ளவற்றைப் பட்டியல் போட்டுச் செல்கிறது.

//But the presence of this natural resource has been a curse for the local tribal villagers. The Jharia area also has a large number of ongoing mine fires, which have a history of more than a century and have been causing great loss to life and property.//

//The entire area has been destroyed by the mining activity and rendered uninhabitable for humans or any other life form. Sadly, it can never be restored, at least not for the next million years.// - (highlight - kaiyedu)

இப்படி அடுக்கிக்கொண்டே போகிறது கட்டுரை நிலக்கரிச் சுரங்கங்களினால் ஏற்படும் கொடுமைகளை.

அய்யா யுரேனியம் என்ன மரத்திலா காய்க்கிறது அப்படியே சாப்பிடுவதற்கு.
ஜடுகுடா மலைப்பகுதி குறித்து ஒரு வரிகூட இல்லை. யுரேனியம் தாதுக்களைத் தோண்டும்போது மேலே சொன்ன எவ்வித ஆபத்தும் வராதா அல்லது நடக்கவில்லையா?

இப்படி அடிப்படையான கேள்விகளைக் கூட மக்கள் கேட்டுவிடக்கூடாது என்று கவனமாக பின்னப்பட்டிருக்கிறது கட்டுரை.

இது குறித்து விரிவான அறிவியல் விமர்சனத்தை பின்னர் பார்க்கலாம்.

ஆனால், பக்த கோடிகளின் இறைச்சல் கட்டுரையின் சத்தத்தைவிட அதிகமாக இருக்கிறது என்பது கட்டுரையைவிட கவலை கொள்ளச் செய்யும் விசயமாக இருக்கிறது.

பிறசேர்க்கை:

அணுக்கதிர்வீச்சின் பாதிப்பை விளக்கும் - தெகல்காவின் கட்டுரை

கலாமின் கட்டுரைக்கு ஒரு ஆற்றல் துறை ஆய்வாளரின் பதில் கடிதம்.